தடுப்பூசி ஏற்றிய பெண் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையைச் சேர்ந்தபெண் ஒருவர் திடீர்உடல் நிலைப்பாதிப்புக்கு உள்ளாகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்தபெண் நேற்றையநாளே 1வது கொரோனா தடுப்பூசியை பெற்று கொண்டவர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு திடீர் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்தபெண் ஏற்கனவே நீரிழிவுநோய் பாதிப்பிற்கு உள்ளானவர் என உறவினர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version