30 பாம்புக்கு மேல் படுத்த தாயும் பிள்ளைகளும்!

தாயும் பிள்ளைகளும் நித்திரை கொண்ட கட்டில் மெத்தையின் கீழ் 30 பாம்பு குட்டிகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குருணாகலில் உள்ள மாவத்தகம தெல்கொல்வத்த பகுதியிலுள்ள வீடொன்றிலே இடம்பெற்றுள்ளது.

வீட்டின் உரிமையாளரின் மனைவியும் பிள்ளைகளும் கட்டில் மெத்தைக்கு கீழே பாம்பு குட்டிகள் இருப்பது தெரியாது, சிலநாட்கள் மெத்தையில் நித்திரை கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரு பாம்புக் குட்டிகளை கண்ட வீட்டின்உரிமையாளர் அவற்றை அடித்துகொன்றுள்ளார்.

பின்னர் நேற்றும் மெத்தையில் ஒர் பாம்புக்குட்டி நித்திரை கொண்டவர்களின் மேல்ஏறிச் சென்றதனால் சந்தேகத்தில், கட்டில் மெத்தையை எடுத்து பார்த்தபோது பாம்பு குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்பின் வீட்டில் இருப்பவர்களின் தகவலைஅடுத்து அங்குசென்ற சூழலியலாளர் கெலும்சோமரட்ன இந்த பாம்பு குட்டிகளை மீட்டார்.

Exit mobile version