யாழ்ப்பாணம் கரவெட்டியில் 18பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் வடமராட்சி, கரவெட்டி பகுதியில் மேலும் 18 பேருக்குக் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று நடாத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்தமுடிவு வெளியாகியுள்ளது.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 66 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 45 பேருக்குத் தொற்றுஇல்லை எனவும், 18 பேருக்குத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதோடு, மூவருக்கு மீள பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version