இலங்கைகிளிநொச்சி

நித்திரையில் இருந்த இளைஞன் மீது வாள்வெட்டு!

வீட்டில் நித்திரை கொண்டுகொன்டிருந்த இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாடத்தபட்டுள்ளதோடு மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் இன்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button