பெற்றோரின் கண் முன்னே இரு வயது சிறுவன் உடல் நசுங்கி பலி!

ரொறன்ரோவின் ஸ்கார்பரோவில் வாகன நிறுத்தும் இடத்தில் இரு வயது சிறுவன் பெற்றோரின் கண் முன்னே உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மார்க்கம் சாலை மற்றும் மெக்னிகோல் அவென்யூ பகுதியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

39 வயதுடைய பெண்ணின் வாகனம் மோதியதிலேயே சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.

இதன்போது பெற்றோரும் சிறுவனோடு உடன் இருந்துள்ளனர்.

சிறுவன் கடைகளை கண்டு மகிழ்ச்சியில் நடந்து செல்லும் போது, துரதிர்ஷ்டவசமாக வாகனம் மோதியது.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிகுழுவினர் குறித்த சம்பவத்தினை உறுதி செய்தனர்.

குற்றுயிராக மீட்கபட்ட சிறுவனுக்கு முதல் உதவி அளித்த போதும், சம்பவ இடத்திலேயே சிறுவன் மரணமடைந்துள்ளான்.

Exit mobile version