ஆறு வருட காதலியை கைவிட்டு வேறொருவருடன் திருமணம்? தற்கொலைக்கு முயற்சி செய்த காதலி!

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி, மீசாலை தம்பு தோட்டம் பகுதியை சேர்ந்த இராசேந்திரன் கஜீபனின் காதல் விவகாரம் சந்திக்கு வந்துள்ளது.

ஒரு பெண்ணை ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். காதலியின் வீட்டிற்கு காதலன் வந்து செல்வதால் இவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாகவே அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் தெரியும்.

கஜீபனது பெற்றோருக்கும் இந்த காதல் விவகாரம் தெரியும். இவர்களுக்கு 2021 தை மாத காலப்பகுதியில் திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தனர்.

திருமணத்தை இழுத்தடித்த கஜீபன் கடந்த மாதம் 15ம் திகதி திருமணம் செய்வதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் காதலித்த பெண்ணை கைவிட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கான முயற்சியில் கஜீபன் இறங்கியுள்ளார்.

திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றியதை உணர்ந்த காதலி கடந்த வாரத்தில் தற்கொலை முயற்சி செய்து உயிர் தப்பியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

Exit mobile version