இனி 24மணித்தியாலமும் தடுப்பூசி போடலாம்!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் அஸ்ட்ரா சேனிகா தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் பணிகள் இன்று தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு மாநகரசபைக்கு அருகாக அமைந்துள்ள விகாரமஹாதேவி பூங்காவில் இன்று காலை முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தலைவர் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை, இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இலங்கையில் 24 மணி நேரமும் தடுப்பூசி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட முதலாவது தடுப்பூசி நிலையம் இதுவாகுமென இராணுவ தளபதி தெரிவித்தார்.

Exit mobile version