இலங்கை

ஏழு வயது சிறுமி சடலமாக மீட்பு!

வவுனியா, கனகராயன்குளம் ஆலங்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து 7 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாதவேளை அயல் வீட்டிற்கு சிறுமி சென்றதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் சிறுமியை காணாததை அடுத்து அயல் வீட்டார் சிறுமியை தேடியுள்ளனர்.

இதன் போது அருகில் உள்ள கிணற்றில் சிறுமி விழுந்திருந்தமை கண்டறியப்பட்ட, உடனடியாக கிணற்றிலிருந்த சிறுமி மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த ஏழுவயது சிறுமி மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button