மனைவி கொலை, கணவன் தூக்கிட்டு தற்கொலை!

மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துவிட்டு, கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று கஹடகஸ்திகிலிய, குகுலேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் தனது மனைவி இன்னொரு பெண்ணுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களை இடைமறித்த கணவன், கூரிய ஆயுதத்தினால் அவர்களை தாக்கியுள்ளார். இதில் குறித்த ஆணின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்த இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை கஹடகஸ்திகிலிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version