தலை வெட்டி பெண் படுகொலை! அமெரிக்காவில் நடந்த கொடூரம்!

பெண் ஒருவர் வீதியில் தலைவெட்டப்பட்டு கொலை செய்யபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் அமெரிக்காவின் மின்னேசேரா, சகோபி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த புதன்கிழமை மதியம் 2:30 மணிக்கு சகோபி சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் பெண் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டும் தலைதுண்டிக்கப்பட்ட நிலையிலும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு இது குறித்து தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் உடலை கைப்பற்றி விசாரணையை நடத்தியதில், கொலை செய்யப்பட்டட பெண் 55 வயதான மபெல்டா தயேர் என கண்டுபிடித்தனர்.

கியூபாவில் இருந்து புலம்பெயர்ந்த தயேர், உள்ளூர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இது குறித்து கடையில் பணிபுரியும் ஊழியர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, தயேர் 42 வயதான அலேசிஸ் சபோரிட் எனும் நபருடன் பழகி வந்தமை தெரியவந்தது.

இந்நிலையில், தயேர் கொல்லப்பட்டமை குறித்து அலேசிஸ் சபோரிட்டை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version