அனைத்து அரச ஊழியருக்கும் மிக முக்கிய அறிவித்தல்!

நாளை மறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் (02) அனைத்து அரச ஊழியர்களும் வழமை போல அரச கடமைக்கு அழைக்கப்படுவ்தற்கான விசேட சுற்றுநிரூபம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகளவான அரச ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியினை பெற்றுவிட்டதாகவும் அரச சேவையினை வழமை போல முன்னெப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியின் செயலாளரது ஆலோசனையின் அடிப்படையில் சுற்று நிரூபம் வெளியீடு செய்யப்பட்டுள்ளதாக அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சுகாதார வழிகாட்டல்களுக்ககு அமைய, அனைத்து அரச ஊழியர்களும் வழமை போல கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.

முன்னர் வெளியீடு செய்யப்பட்ட “சுழற்சி முறையில் சேவைக்கு அழைத்தல் மற்றும் வீடுகளில் இருந்தவாறு சேவைகளை மேற்கொள்தல்” குறித்த அனைத்து சுற்று நிரூபங்களும் இரத்து செய்யபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version