இலங்கை

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம்!

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நாளை (01) முதல் மீள ஆரம்பமாக உள்ளன.

நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அனைத்து அரசஊழியர்களும் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளமையால், அவர்களின் வசதி கருதி சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன.

இதன் அடிப்படையில், காலை மற்றும் மாலை வேளைகளில் பொது போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதோடு, இடைப்பட்ட காலப்பகுதியில் 25வீத போக்குவரத்து சேவைகளே முன்னெடுக்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தொற்று பரவல் வேகமானது மீளவும் அதிகரிக்கின்றமையால், பொது போக்குவரத்தின் போது மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும், மிகவும் முக்கிய தேவைகளுக்கு மாத்திரம் பொது போக்குவரத்தினை பயன்படுத்துமாறு மக்களிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button