யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் பலருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் சுமார் 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு வடக்கு மாகாணத்தில் 80 பேருக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பரிசோதனை கூடத்தில் 517 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினை சேர்ந்த 42 பேர் உட்பட வடமாகாணத்தில் 60 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட 208 பி.சி.ஆர் பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலணை பிரதேசத்தில் 34 பேருக்கும்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் 18 பேருக்கும்,
சங்கானையில் 02 பேருக்கும்,
சாவகச்சேரியில் 06பேருக்கும்
பண்டத்தரிப்பில் ஒருவருக்கும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 பேர், வெலி ஓயா பகுதியில் 06 பேர், புதுக்குடியிருப்பில் 05 பேர்,

கிளிநொச்சியில் 05 பேர், பளையில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 02 பேருக்கும், புளியங்குளத்தில் ஒருவருக்கும், செட்டிகுளத்தில் ஒருவருக்கும், மன்னாரில் 02 பேருக்கும்,

யாழ்.பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ஒருவருக்குமாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

Exit mobile version