ரிஷாத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக சஜித் அறிவிப்பு!

எதிர்வரும் நாட்களில் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி அமைத்துள்ள கூட்டணிக்குள் இருந்து விலக்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குற்ற புலனாய்வு பிரிவிற்கு ஹரின் பெர்ணாட்டோ உடன் சஜித் பிரேமதாச இன்று வருகை தந்த போதே, சஜித் பிரேமதாச ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்விடயத்தை மறைமுகமாக தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரிஷாத் கட்சியை சேர்ந்த பலரும் 20ஆவது திருத்த சட்டத்திற்கும் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தமது கூட்டணி எடுத்த தீர்மானங்களை எதிர்த்து செயற்பட்டமையினால் அவர்களை கூட்டணியில் இருந்து விலக்கி உள்ளதாக சஜித் தெரிவித்துள்ளார்.

Exit mobile version