யாழில் கொழுத்தி போட்ட தீக்குச்சியால் பரிதாபமாக பலியான இளம் பெண்!

தேநீர் வைப்பதற்கு அடுப்பை மூட்டி விட்டு தீக்குச்சியை அணைக்காமல் கீழே போட்டதில் ஏற்பட்ட தீ விபத்தில் 32வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் மரணமடைந்துள்ளார்.

அடுப்புகட்டுக்கு கீழே பெற்றோல் போத்தலை கணவன் வைத்ததை அறிந்திராத குறித்தபெண், தீக்குச்சியை அணைக்காமல் கீழே போட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த பெண் எரிகாயங்களுக்கு உள்ளாகினர் என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (வயது- 32) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயாரே இதில் உயிரிழந்தார்.

கடந்த வியாழக்கிழமை (22ஆம் திகதி) மதியம் நின்று சமைக்கும் விறகு அடுப்பில் தேநீர் வைப்பதற்கு மண்ணெண்ணைய் ஊற்றி நெருப்பை வைத்து விட்டு தீக்குச்சியை கீழே போட்டுள்ளார்.

அடுப்பு கட்டுக்கு கீழே கணவர் பெற்றோல் போத்தலை வைத்திருந்தமை தெரியாமல் குடும்பபெண் நெருப்பு குச்சை கீழே போட்டமையால் பெற்றோல் திடீரென தீப்பற்றியமையால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

உடம்பில் தீபற்றியதால் அவர் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.

எரிகாயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

5 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குடும்பப் பெண் இன்று காலை உயிரிழந்தார் என மரண விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version