வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா!

வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதியில் நின்றிருந்த பாலியல் தொழிலாளி ஒருவரிடமும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் கிடைக்கபெற்ற நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து குறித்தபெண் தலை மறைவாகியிருந்த நிலையில் பொலிசாரின் உதவியுடன் இன்று கண்டுபிடிக்கப்பட்டு பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டார்.

Exit mobile version