அமெரிக்காவை போல கோத்தாவுக்கு விசேடஅறை!

அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமைக்கப்பட்டுள்ள தனிஅறையை போல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் ஊடகசந்திப்பை நடத்துவதற்கென பிரத்தியேக அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தஅறையினுள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மாத்திரம் கலந்துகொண்டு ஜனாதிபதியினை அல்லது அவரது ஊடக பேச்சாளரிடம் கேள்விகளை கேட்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வறையானது, ஊடகங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கும் பொய்யான தகவல்கள் பரவாமல் தடுப்பதற்காகவும் பயன்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகபேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு வாராந்திர ஊடக சந்திப்புகள் இங்கே நடைபெறுமெனவும் அதற்காக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மாத்திரம் அழைக்கப்படுவார்கள் எனவும் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

Exit mobile version