எதிர்வரும் மாதம் நாடு திறக்கப்படும்! கோத்தா அறிவிப்பு!

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின் நாட்டை மூடி வைக்கும் எண்ணம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாத முடிவில் 10.5 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகளை ஏற்றினால் நாடு முழுதும் 80% மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, நாட்டை முடக்கி வைத்திருந்தமையே நாட்டினது பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமெனவும் ஜனாதிபதி அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version