இலங்கையாழ்ப்பாணம்

யாழில் கொரோனா கொத்தணியாக மாறிய ஆலய திருவிழா!

யாழ்ப்பாணம் கரவெட்டி தெற்கு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற திருவிழாவில் கலந்து கொண்ட 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி கரவை மூங்கோடை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் சுகாதார பிரிவினரால் அங்கு 170 பேருக்கு நடத்திய பீ.சி.ஆர் பரிசோதனைக்கு 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்ளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதி முடக்கப்படலாம் என கரவெட்டி சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.வும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button