இலங்கை

இளம் கணவன் மனைவி சடலமாக மீட்பு! முல்லைத்தீவில் பெரும் சோகம்!

கிணற்றில் வீழ்ந்து இளம் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் மல்லாவி பகுதியினை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(வயது 31), பிரதீபன் மாலினி (வயது 27) ஆகியோரே உயிரிழந்துள்ளனர் .

குறித்த இருவரும் நேற்று மாலை 7 மணியளவில் இருவரும் கிணற்றில் வீழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இவர்கள் கிணற்றிற்குள் வீழ்ந்து தற்கொலை செய்தார்களா? அல்லது கிணற்றினுள் தள்ளிவிடப்பட்டார்களா? என்பது தற்போதுவரை உறுதியாகவில்லை.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து 10மாதங்களே ஆகியுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button