க.பொ.த சாதாரணதர பரீட்சை அடுத்த வருடம் இடம்பெறும்!

இந்த வருடத்திற்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சார் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 2021ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.

சாதாரண தர பரீட்சைகளானது பெப்ரவரி 21ம் திகதி முதல் மார்ச் 3ம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version