13 வயதுச் சிறுமி துன்புறுத்தல் தந்தை மற்றும் அத்தை கைது!

நுரைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் 13 வயதுச் சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த தக வலின் அடிப்படையில் குறித்த சிறுமியை காப்பாற்றிய பொலிஸார், சிறுமியின் தந்தை மற்றும் அத்தை ஆகி யோரைக் கைது செய்திருந்தனர்.

குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியதையடுத்தே, அவர்களை எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர விடப்பட்டுள்ளது.

சிறுவர், சிறுமியருக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற அத்துமீறல்களும் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றமையை அடுத்து இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version