கெப்பிடல் மகாராஜா தலைவர் மகேந்திரன் உயிரிழந்தார்!

கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களது தலைவர் R. ராஜா மகேந்திரன் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

கொழும்பூ நவலோக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டமையினால் சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதோடு, கொரோனா வைரஸ் இவரது நுரையீரலை கடுமையாக தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Exit mobile version