33பேரை படுகொலை செய்து தலிபான்கள் வெறிச்செயல்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தலிபான்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள 33 பேரை தலிபான் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசிற்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் செயற்பட்டு வந்த அமெரிக்க இராணுவத்தினர் வாபஸ் பெற்று மீள அமெரிக்காவிற்கு திரும்பி வருகின்றனர்.

இதனால், ஆப்கானின் பல பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள மத போதகர்கள், மூத்த பழங்குடியினர், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாவர்கள் மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் என 33பேரை படுகொலை செய்து தலிபான்கள் வெறிசெயலில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version