இலங்கை

திருமணமான அன்றே பிரிந்த ஜோடி! நண்பர்கள் செய்த மோசமான செயல்!

இலங்கையில் திருமணமான தமது நண்பனிற்கு ஆச்சரியமான வரவேற்பளிக்கிறோம் என்ற பெயரில் நண்பர்கள் செய்த இழிவான செயலால், திருமண நாளிலேயே ஒரு ஜோடி பிரிந்த சம்பவம் ஒன்று தம்புள்ளை பகுதியில் நடந்துள்ளது.

நண்பர்கள் செய்த மோசமான செயலை சகித்து கொள்ளும் மாப்பிள்ளை, தன்னுடைய மகளை நன்றாக பார்த்து கொள்ள மாட்டார் என கூறி, தனது மகளை மண கோலத்துடனேயே, பெண்ணின் தந்தை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.

இது குறித்து தெரியவருவதாவது,

தனியார் கம்பனியில் வேலை செய்யும் 28வயதான இளைஞர் ஒருவருக்கு நிறைய நண்பர்கள். நண்பர்களுடன் வேடிக்கையான பொழுதை போக்குவது அவருக்கு முக்கியமான ஒன்று.

இந்நிலையில் ஊருக்கு வரும் மாப்பிள்ளையை தடல்புடலாக வரவேற்க வேண்டாமா என இளைஞனின் நண்பர்களிற்கு யோசனை தோற்றியது. அதுதான் விவகாரமாக மாறி, இப்போது விவகாரத்தில் வந்து நிற்கிறது.

திருமண ஜோடி ஊருக்கு வந்த வாகனத்தை நடு வீதியில் திடிரென வழிமறித்த நண்பர்கள், அந்த ஜோடியை வாகனத்தை விட்டு கீழே இறங்கும்படி கூறினர். நண்பர்கள் எனும் பெயரில் கொடூரர்களை போல நின்றவர்களை பார்த்து பயமடைந்த மணப்பெண், மணமகனை காரை விட்டு இறங்க வேண்டாமென்றார்.

உடனடியாக இருவரும் இறங்காவிட்டால் தாம் என்ன செய்வோமென்பதே தெரியாது, உடனே இறங்குங்கள் என அவர்கள் மிரட்டல் விட்டனர். மணமகன் இறங்க முயல, மணமகள் தடுக்க, இருவருக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது.

இதனை சகித்துகொள்ள தந்தை தனது மகளை மணக்கோலத்துடனேயே வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

எனினும் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகிய நண்பர்கள் வேட்டியை உயர்த்திய ஜோடியும், இச்செய்தியும் வெளியாகிய ஜோடியும் வேறு வேறானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button