யாழ்ப்பாணம்விடுப்பு

யாழில் பெண்களின் பின்பகுதியை நுள்ளி திரிந்தவருக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணத்தின், நெல்லியடி பகுதியில் வீதிகளால் செல்லும் பெண்களுடன் அங்க சேட்டை விட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு மற்றுமொருவர் தலை மறைவாகிவிட்டார்.

நெல்லியடி- கொடிகாமம் வீதியில், செல்லும் யுவதிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட காமுகர்கள் தொடர்பில் பொலிசாருக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளன.

இதனை அடுத்து குறித்த சமூக விரோத செயலில் ஈடுபடுபடுபவர்களை இனம் காணும் பணியை பொலிசார் முன்னெடுத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம், துன்னாலையை சேர்ந்த யுவதி ஒருவர் வீதியால் செல்லும் போது, பின்னால் வந்த இரு இளைஞர்கள் யுவதியின் பின் பகுதியை நுள்ளி, தட்டி அத்து மீறலில் ஈடுபட்டனர்.

குறித்த யுவதி துன்னாலை பகுதியை சேர்ந்தவர் என்பதால் சமூக விரோத செயலில் ஈடுபட்ட இருவரையும் இனம்கண்டதோடு நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

காமுகர்கள் இருவரும் துன்னாலை பகுதியை சேர்ந்தவர்கள். வேகமாக செயற்பட்ட பொலிசார் நேற்று முன்தினமே, இரு சந்தேகநபர்களது வீடுகளையும் சுற்றி வளைத்தனர். ஒருவர் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். இதில் 22 வயதான ஒருவர் சிக்கினார்.

இரு இளைஞர்களும் போதைக்கு அடிமையானவர்கள். கைதானவர் திருமணம் செய்து, தற்போது மனைவி சண்டைபிடித்து சென்று விட்டார்.

பெண்களை பார்க்கும் போது தனக்கு ஆசையாக இருப்பதாகவும், அதனாலே அங்க சேட்டையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button