ரிஷாத் வீட்டில் மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகநபர் கைது!

பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மற்றுமொரு சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திட்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது 22வயதான குறித்த பெண், தனது 16 வயது தொடக்கம் 20வது வயதுவரை ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்தமை தெரியவந்துள்ளது.

அதாவது 2016தொடக்கம் 2019வரையான காலப்பகுதியில் பணிபுரிந்துள்ளார். இதன்போது இரு தடவைகள் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாத்தின் வீட்டில் டயகமவை சேர்ந்த 16வயது சிறுமி பணிபுரிவதற்கு முன்னர் குறித்த 22வயது பெண் பணியாற்றியமை தெரியவந்துள்ளது.

தற்போது 22வயதான குறித்த பெண் ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த காலப்பகுதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறித்து ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனான, 44 வயதுடைய செயாப்தீன் ஷ்மதீன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version