கோட்டா அரசிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்கு கீழே கொண்டுவரப்படுகின்றமைக்கு எதிராக மிக விரைவில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கோத்தா தலைமையிலான அரசாங்கம் மாகாணங்களுக்கு உரித்தான கல்வி, சுகாதாரம் ஆகிய மாகாணத்திற்கான அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் செயற்பட்டு வருகின்றது.

இதற்கு சிலர் துணை போகின்றார்கள். சில மாயைகளை நம்பி சிலர் மாகாண அதிகாரத்தை மத்திக்கு தாரைவார்க்கும் முகமாக செயற்பட்டு வருவாத தெரிவித்தார்.

Exit mobile version