யாழ்ப்பாணம்விடுப்பு

உறவு கொண்ட பின் பிரான்ஸ் போன பழைய காதலி! புதுபிக்க முயன்ற கிளிநொச்சி ஆசிரியரால் குடும்பமே குலைந்தது!

கிளிநொச்சியில் உள்ள ஆசிரியர் ஒருவர் தனது பளை பகுதியை சேர்ந்த பழைய காதலியை மறக்க முடியாமல் திண்டாடியமையால், பிரான்சில் உள்ள குடும்பம் ஒன்று குலைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரும், பளை பகுதியை சேர்ந்த பெண்ணும் சில வருடங்களின் முன் திருமணம் முடித்து, பிரான்சிற்கு சென்று உள்ளார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

பிரான்சில் வைத்து சில தினங்களின் முன்னர் கணவனால் தாக்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை அடுத்து பொலிசாரால் கணவன் கைது செய்யப்பட்ட நிலையில், இப்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற வழக்கு இப்பொழுது போடப்பட்டுள்ளது. மனைவி, பிரான்ஸில் உள்ள சொந்தக்காரர் ஒருவரது வீட்டில் பிள்ளைகளுடன் தங்கி உள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கும், பிரான்ஸில் உள்ள பெண் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற பேஸ்புக் உரையாடலே காரணமென தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி ஆசியரும், பளையில் இருந்து பிரான்சிற்கு சென்ற பெண்ணும் கல்விகற்கும் காலத்தில் நெருங்கிய உறவில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது இருவரும் வேறு வேறு திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார்கள்.

எனினும், பேஸ்புக் ஊடாக பழைய காதலை இருவரும் புதுப்பித்தமையே இக்குழப்பத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button