உலகம்

அதிக அறிகுறிகளுடன், கொரோனா தீவிரம்!

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உடல் சோர்வு, மூச்சுத் திணறல், தசை வலி, இருமல், மூட்டு வலி, நெஞ்சுவலி, வாசனை உணராமை, வயிற்றுப்போக்கு, சுவையின்மை ஆகியவை அறி குறிகளாக கருதப்படுகின்றன.

இந்த அறிகுறிகள் தொடர் பாக இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை “ராயல் சொசைட்டி ஆப் மெடிசின்’ பத்தி ரிகையில் வெளியிட்டுள்ளனர்.

அதில் 5இற்கும் மேற்பட்ட அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் ஆளாகி றபோது, அவர் மாதக்கணக்கில் கொரோனாத் தொற்றினால் மோசமாக அவதிப்பட நேரிடும் என தெரிய வந்துள்ளது.

குறிப்பாக உடல் சோர்வு, தலைவலி, மூக்கு ஒழுகுதல், இருமல், நாசி நெரிசல் ஆகிய வற்றுடன் சுவாசக் கோளாறு இருந்தால் நீண்டகாலம் கொரோனாப் பாதிப்பு இருக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வுக்கு பயன்படுத் தப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், கொரோனாவால் 8 வாரங்களுக்கு மேலாக மோச மாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button