இலங்கைவிடுப்பு

யாழில் அக்காவை காதலித்து தங்கையை கர்ப்பமாக்கிய அரச ஊழியர்!

யாழில் உள்ள அரச திணைக்களம் மொன்றில் பணிபுரியும் 29வயதான அரச ஊழியர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள குடும்பம் ஒன்றில் அக்கா, தங்கை இருவரையும் காதலித்துள்ளார்.

இந்நிலையில் தங்கை தற்போது அரச ஊழியரால் கர்ப்பமான நிலையில் அவரது பல திரு விளையாடல்கள் வெளி வந்துள்ளது.

உயர் தொழில் நுட்பக்கல்லுாரியில் கல்வி கற்று வந்த தனது வீட்டுக்கு அருகே உள்ள 23 வயதான யுவதியை காதலித்து வருவதும் அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இந்நிலையில் அந்த யுவதியின் தங்கையான 20 வயதான இளம் பெண் ஓரிரு நாட்களுக்கு முன்னர் திடீரென சுகவீனமடைந்து தனியார் வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டார். இதன்போது அவர் கர்ப்பம் அடைந்துள்ளர் என வைத்தியரால் கூறப்பட்டுள்ளது.

இதன் பின் யுவதியின் குடும்பத்தினர் நடாத்திய விசாரணையின் போது அக்காவின் காதலனே தன்னை கர்ப்பமாக்கியதாக யுவதி தெரியவந்துள்ளார்.

“எனது காதலன் என தெரிந்தும் ஏன் நீ அவனிடம் இப்படி நடந்து கொண்டாய்” என அக்கா தங்கையிடம் கேட்ட போது “உன்னை பகிடிக்கு லவ் பண்ணுவதாயும் என்னையே உயிருக்குயிராய் லவ் பண்ணுவதாயும் தங்கை கூறியுள்ளாராம்.

அரச ஊழியரான மன்மதனின் மீது காதலியான அக்கா கொலை வெறியில் உள்ளாராம். தனது காதலியின் தங்கை கர்ப்பம் என அறிந்து தலைமறைவாகிய காதலன் இன்று தனது அலுவலகத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அலுவலகத்திற்கு வந்த காதலி பிரளயம் செய்து விட்டு சென்றதாக தெரிய வருகிறது.

சாவகச்சேரியில் காதலனின் அம்மம்மா தனியே வசித்து வருகின்றாராம். அம்மாம்மா வீட்டுக்கு என்னை கொண்டு சென்றது போல எனது தங்கையையும் கொண்டு சென்றாயா என கேட்டு காதலனின் அம்மம்மாவையும் தரகுறைவாக காதலி திட்டி தீர்த்துள்ளாராம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button