ஒலிம்பிக் போட்டியாளர் இருவருக்கு கொரோனா!

எதிர்வரும் ஐந்து நாட்களில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருந்த இரு போட்டியாளர்களிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பரிசோதனைக்கு பின்னர் ஒலிம்பிக் கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தனிஅறையில் தங்க வைக்கப்படுவார்கள்.

இந்நிலையில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு நடாத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

போட்டியாளர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தினுள் தொற்று எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் அனைவருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.

இந்த நிலையில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட இரு வீரர்களிற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version