எரிபொருள் பவுசர் வெடித்ததில் 13 பேர் பலி!

கென்யா நாட்டில் எரிபொருள் பவுசர் ஒன்று வெடித்ததில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் தெரிவிக்கையில்

கென்யாவின் மேற்கு பிராந்திய நகரங்களில் ஒன்றான மலேங்காவிற்கு அருகே எரிபொருள் பவுசர் வெடித்த சம்பவம் ஒன்று நேற்று இரவு பதிவாகியுள்ளது.

எரிபொருள் பவுசர் இன்னொரு வாகனத்துடன் மோதிய போது எரிபொருள் பவுசர் கவிழ்ந்தது. இதை அடுத்து பவுசரிலிருந்து கசிந்த பெற்றோலை சேகரிப்பதற்காக பெரும் எண்ணிக்கையானோர் திரண்டனர்.

இதன்போது திடீரென பவுசர் தீப்பற்றி வெடித்தது. சம்பவ இடத்திலேயே 13பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version