கொழும்பில் புதைக்கப்பட்ட கோடி பணம் மீட்பு!

கொழும்பு கொட்டாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 13.9 மில்லியன் (1.39கோடி) ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர் ஒருவரது உதவியாளர் ஒருவரது வீட்டிலேயே இந்த பணம் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய ஹரக் கட்டகே என்பவரது உதவியாளரின் வீட்டிலேயே இந்த பணம் புதைத்து வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version