இலங்கைகொழும்பு

எஸ்.ரி.எப் இன் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

கொழும்பிற்கும் நீர்கொழும்பிற்கும் இடையே அமைந்துள்ள சீதுவை பிரதேசத்தின் பேஸ்லைன் வீதியில் மோட்டார் வாகனம் ஒன்றினை சோதனைக்கு உட்படுத்திய போது பொலிஸ் விசேட அதிரடி படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்ததாவது,

பொலிஸ் விசேட அதிரடிபடைக்கு கிடைத்த தகவலை அடுத்து வாகனம் ஒன்றினை பின்தொடர்ந்து சென்று சோதனைக்கு உட்படுத்தபட்டது.

இதன்போது, நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகனத்தில் பயணம் செய்த 44வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார்.

குறித்த நபர் பல்வேறு குற்ற செயல்களுடனும் 6 கொலை சம்பவங்களுடனும் தொடர்புபட்ட நபர் என தெரிய வந்ததுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது மோட்டார் வாகனத்தில் மேலும் இருவர் இருந்தனர்.

அத்தோடு குறித்த இடத்தில் இருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button