கோட்டா அரசிற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

தற்போது நிலவும் கோட்டாபய அரசின் அடக்குமுறையினையும் பொருள் விலையேற்றத்தினையும் கண்டித்து வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டமானது, பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்,

‘அரசே பொருட்களின் விலையேற்றத்தை உடனே நிறுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், போராடும் மக்கள் மீது பொலிஸாரை ஏவாதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, இலங்கையின் கடல் வளத்தை அழிப்பதற்கு துணை போகாதே, உரத்தடையை நீக்கு, விவசாயிகளுக்கு உடன் தீர்வு தா, பெண்கள் மீதான சுமைகளை அகற்று, அந்நிய வல்லரசுகளின் ஆதிகாரத்திற்கு இடமளிக்காதே’ ஆகிய வாக்கியங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல சமூக மட்ட அமைப்புக்களது பிரதிநிதிகள் கலந்து கெண்டிருந்தனர்.

Exit mobile version