ரிஷாத் வீட்டில் உயிரிழந்த சிறுமி! வெளியாகிய புதிய தகவல்!

கொழும்பு – பொரள்ளையில் உள்ள பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதினின் வீட்டில் வேலை செய்த சிறுமி 15 வயதில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டமை தெரியவந்துள்ளது.

ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்த 15வயது சிறுமி ஒருவர் எரிகாயங்களுக்கு உட்பட்ட நிலையில் ஜூலை 3ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி ஜூலை 15ஆம் திகதியன்று குறித்த சிறுமி உயிரிழந்தார்.

இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர், சிறுமியை ரிஷாத்தின் வீட்டிற்கு கடந்த ஆண்டு அக்டோபரில் வீட்டு பணிக்காக அழைத்து வந்தபோது அவருக்கு 15 வயது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இறந்த சிறுமியின் தாயிடமிருந்து பொலிஸார் ஒரு வாக்குமூலத்தை முன்னர் பதிவு செய்திருந்த நிலையில் மற்றொரு வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Exit mobile version