கைது செய்யபட்ட பெண் மரணம்! பொலிஸாரின் கவனமின்மையே காரணமாம்!

பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 43 வயட்துடைய மூன்று பிள்ளைகளின் தாயார் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.

தனக்கு சுகயீனமாக உள்ளதாக குறித்த தாயார் பொலிஸாரிற்கு கூறிய போதும் பொலிஸாரின் கவனமின்மையால் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் ஒரு தரப்பு மேற்கொண்ட முறைப்பாட்ட்டை அடுத்து உயிரிழந்த பெண் உட்பட 5 பேர் கைது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

உயிரிழந்த பெண் சுகயீனமாக உள்ளதென பொலிஸாரிடம் தெரிவித்த போதிலும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுக்காமையினாலேயே அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கினறனர்.

Exit mobile version