கோத்தாபயாவை கொலை செய்ய திட்டம்! முல்லைதீவில் ஒருவர் கைது!

கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்டு முள்ளியவளை கொரோனா இடைத்தங்கல் நிலையத்தில் தனிமைப் படுத்தல் காலம் முடிவடைந்ததும் கைது செய்யப்பட் டவர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, விநாயகமூர்த்தி முரளி தரன் (கருணா அம்மான்), நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந் திரன் ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்தவர் என பயங் கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி முள்ளியவளை கொரோனா இடைத்தங்கல் நிலையத்தில் வைத்து திருகோணமலையைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவர் திருகோணமலையிலிருந்து 2019ஆம் ஆண்டு தப்பிச்சென்றிருந்த நிலையில் இன்டர்போல் ஊடாக தேடப்பட்டு வந்தார் எனவும். இந்த நிலையில் கட்டாரில் அவர் கைது செய்யப்பட்டார் எனவும் பயங்கரவாத தடுப்புப்பிரிவு தெரிவித்தது.

நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அவர் கொரோனா இடைத்தங்கல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என  அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version