4கிராம் ஹெரேயினுடன் இருவர் கைது!

விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 4கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயினுட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோண மலை துறைமுகபொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வைத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து துறைமுக பொலிஸார் நடாத்திய சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் 23 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version