கிளிநொச்சியில் விபத்து! 20வயது இளைஞர் பலி!

கிளிநொச்சி, பளை பகுதியில் இன்று(15) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்தனாது பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து தெரியவருவதாவது,

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது வவுனியாவில் இருந்து யாழ் நகரை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரில் ஒருவர் பலியாகியுள்ளதோடு ஏனைய இருவர் காயமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பொல்கஹவலை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version