கொழும்பு, கம்பஹாவில் அதிக தொற்றாளர்கள் பதிவு!

நேற்று புதன்கிழமை பதிவான 1540 தொற்றாளர் எண்ணிக்கையில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்திலும், கொழும்பு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதாக தேசிய கொரோனா தடுப்பு செயலனி தெரிவித்துள்ளது.

அதற்கமைய மாவட்ட ரீதியில் தொற்றுக்குள்ளனவர் எண்ணிக்கை
கம்பஹாவில் 235
கொழும்பில் 232
களுத்துறையில் 157
இரத்தினபுரியில் 111
யாழ்ப்பாணத்தில் 81
காலியில் 78
கேகாலையில் 70
மட்டக்களப்பில் 67 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இதில் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய 87 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் மொத்தமாக 1,540 தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version