இலங்கை

பிறந்த குழந்தையை கொலை செய்து எரித்த தாய் விளக்கமறியலில்!

கந்தளாய் – பேராறு பகுதியில் தனக்கு பிறந்த பெண் குழந்தையை கொலை செய்து தீ வைத்து எரித்த தாய் ஒருவரை இம்மாதம் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் இன்று (14) புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண் 35 வயதுடைய கந்தளாய் பேராறு மத்ரஸாநகர் பகுதியை சேர்ந்த சுபியான் பாரூக் பௌமியா என்பவர் என தெரியவந்துள்ளது.

இவரது கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் வேறு ஒரு ஆணுடன் நெருங்கி பழகியதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிறந்த குழந்தையை அதே தினத்தில் கொலை செய்து எரித்துள்ளார்.

தெருநாய்கள் எரித்த குழந்தையில் உடலை காவிசென்றதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து குறித்த பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மூன்று பிள்ளைகளின் தாயான குரித்த பெண்னை பொலிஸார் இன்றையதினம்கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இன்றில் இருந்து இருவாரத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button