இலங்கைகொழும்பு

மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து ஆரம்பம்!

இன்று தொடக்கம் மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுபோக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட பேருந்துகள், ரயில்கள் ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஈடுபடுத்தப்படுகிறது.

சுமார் இரு மாதத்திற்கு பின்னர் இன்றையதினம் மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை வழமைக்கு திரும்புகிறது.

ஏழு புகையிரதங்கள் காலையும் மாலையும் அலுவலக பணிக்கு செல்பவர்களுக்காக மாத்திரம் சேவையில் ஈடுப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி- கொழும்பு கோட்டைக்கு இரு ரயில்களும், ரம்புக்கனை – கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயிலும், சிலாபம்- கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயிலும், , பெலியத்தை – கொழும்பு கோட்டை ஒரு ரயிலும், , காலி – கொழும்பு கோட்டை ஒரு ரயிலும், மஹவ- கொழும்பு கோட்டைக்கு ஒரு புகையிரத ரயிலும், சேவையில் ஈடுபடவுள்ளது.

பொது போக்குவரத்தினை பயன்படுத்துபவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேணடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button