சட்ட விரோத கருக்கலைப்பு செய்த தாய் பலி!

சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த 36வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது பொகவந்தலாவ பிரதேசத்திற்குட்பட்ட மோரா தோட்ட மேற்பிரிவில் இடம்பெற்றுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய சுப்பிரமணியம் காஞ்சனா என்பவரே இன்று (12) காலை உயிரிழந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதிக்குச் பொலிஸார் சென்றனர்.

குறித்த வீட்டினை சோதனை செய்த போது, அவ்வீட்டில் கூடை ஒன்றில் இரத்த கரைபடிந்த ஆடைகள் இருந்ததாகவும், அத்தோடு சுமார் 7 மாதங்கள் மதிக்கதக்க பெண் சிசு ஒன்றின் சடலம் இருந்ததையும்  பொலிஸார் கண்டுள்ளனர்.

சட்டவிரோத கருக்கலைப்பின் போதே இவ்விரு உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கருக்கலைப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் பெயரில் 35 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version