பிறந்த குழந்தையை கொலை செய்து எரித்த கொடூர தாய்!

கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், வேறொரு நபருடன் தகாத உறவில் இருந்ததன் மூலம் பிறந்த குழந்தையை கொலை செய்து எரித்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது திருகோணமலை கந்தளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றிற்கு சென்றுள்ளார்.

37வயதான குறித்த பெண் வேறு ஒரு ஆணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.

குறித்த பெண்ணிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிசு பிறந்துள்ளது.

இதனை அடுத்து பிறந்த சிசுவினை கொலை செய்துவிட்டு எரித்துள்ளார்.

இந்நிலையில் எரிந்த சிசுவின் உடற் பாகத்தை தெரு நாய்கள் கவ்விச்சென்ற நிலையில் இது தொடர்பாக அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சிசுவினை பிரசவித்து எரித்த பெண்ணை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனார்.

Exit mobile version