கப்பல் தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 42கோடி ஒதுக்கீடு!

எஸ்பிரஸ் கப்பல் தீ விபத்திற்கு உள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுமார் 42கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாவும் இதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இடைக்கால இழப்பீட்டில் மீனவர்களுக்காக 20 கோடி பணத்தை கப்பல் நிறுவனம் வழங்கியுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அத்துடன் இதற்கு மேலதிகமாக மேலும் 22 கோடி நிதியை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்த 200-க்கும் அதிகமான கடலாமைகள் இதுவரை கரை ஒதுங்கியுள்ளதாகவும் 20க்கும் அதிகமான டொல்பின்களும் 6 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version