பாராளுமன்ற உறுப்பினராக பசில்! வெளியாகியது வர்த்தமானி!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ச நியமனம் செய்யப்படுவதாக தெரிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியகியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பிரான ஜயந்த கெட்டகொட தனது பதவியை நேற்றையதினம்  இராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அவரது இடத்திற்கு பசில் ராஜபக்சவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவரின் பெயர் இன்று வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது.

நாளையதினம் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளார்.

Exit mobile version