இலங்கை

திருமலை மக்கள் குடியிருப்பு பகுதியில் பதற்றம்!

திருகோணமலையில் மக்கள் குடியிருப்பு பகுதி ஒன்றில் முதலை ஒன்று புகுந்தமையினால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

திருகோணமலை 4ம் கட்டை சிங்ஹபுர பகுதியில் உள்ள வீடொன்றினுள் முதலை புகுந்ததால் அப்பகுதிவாசிகள் பதற்றமடைந்து வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கினர்.

குறித்தஇடத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் முதலை மீட்கப்பட்டது. நான்கு அடிநீளம் கொண்ட முதலை ஆண்டான்குளம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button