தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற மருத்துவ தாதி! திருகோணமலையில் சம்பவம்!

37வயதுடைய மருத்துவ தாதியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை, சேருநுவர பகுதியில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை முயற்சித்துள்ளார்.

ஈச்சிலம்பற்று கொவிட் பணிமனையில் முகாமில் கடமையாற்றி வந்த சேருநுவர-பகுதியைச் சேர்ந்த மனோகரி (37வயது) என்பவரே தற்கொலைக்கு முயற்சித்தமை தெரியவந்துள்ளது.

இவரது கணவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த தாதிய உத்தியோகத்தர் தற்பொழுது ஈச்சிலம்பற்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் கடமையாற்றி வரும் நிலையில் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த தாதிய உத்தியோகத்தர்  சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version